தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

(க.ருத்திரன்)இம்முறை நடைபெற்று முடிந்த தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்குடா கல்வி வலயத்திலுள்ள பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில்  (20) நடைபெற்றது.

குறித்த பாடசாலையில் 12 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் இறைவழிபாட்டுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.
சித்திபெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்,கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மற்றும்அதிபர் ஆகியோர்களுக்கு நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராட்டுகளை தெரிவித்து பரிசில்கள் வழங்கி வைத்தார்.

இதன்போது சித்தி பெற்ற மாணவர்களுக்கு வழமைபோன்று வழங்கப்படும் துவிச்சக்கர வண்டிகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் சிறுவர் சேமிப்பு கணக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
க.ருத்திரன்.