ஆர்ப்பாட்டம் 40பேருக்கு எதிராக மட்டில் வழக்குத்தாக்குதல்

  • (கனகராசா சரவணன்)

மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ம் 8ம் திகதி  விஜயம் செய்தபோது  செங்கலடி மற்றும் நகரில் அவருக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இன்னால் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள், மற்றும் கால் நடை பண்ணையாளர்கள் அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேருக்கு எதிராக நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் கீழ் ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமை (27)   வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்ததந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 7ம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பு சாந்தா புனித மிக்கேல் ஆண்கள் தேசிய பாடசாலை 150 வருட நிறைவு விழாவிற்கும்  8ம் திகதி செங்கலடி மத்திய மகாவித்தியாலய 149 வருட நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டு மேச்சல் தரை பண்ணையாளர்கள் தமது மேச்சல் தரையில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு கோரி ஒருபுறமும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மக்கள் தமக்கு அந்த நிலம் வேண்டும் என கோரி ஒரு புறமாகவும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அதற்கு தலைமை தாங்குபவர்களுக்கு தடை உத்தரவு வழங்குமாறு நீதிமன்றத்தில் பொலிசார் கோரினர்

இதன் போது நீதிமன்றம் வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதித்ததுடன் அதனை மீறி வீதியை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால்  போக்குவரத்து விதிமுறையின் கீழ் அவர்களுக் எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்கவும் என நீதிமன்றம் கட்டளை வழங்கியது

இந்த நிலையில் 7ம் திகதி ஜனாதிபதி மிக்கேல் கல்லூரிக்கு வருகை தந்திருந்த   போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தலைமையிலான மேச்சல் தரை மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றவாசிகள் கொண்ட குழுவினர் கல்லூரிக்கு உட்புகுவதற்கு முயற்சித்த போது அவர்களை பொலிசார் வீதிதடைகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியதுடன் நீதிமன்ற கட்டளையை தெரிவித்த நிலையில் அதனை மீறி வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வாறே 8ம் திகதி செங்கலடி மத்திய மாகாவித்தியாலயத்துக்கு ஜனாதிபதி வருகைதந்திருந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்ட ஊர்வலத்தில்  ஈடுபட்டவர்களை செங்கலடி வாழைச்சேனை பிரதான வீதி கொம்மாந்துறை விநாயகர் வித்தியாலயத்துக்கு அருகில் போலிசார்  வீதிதடையை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியபோது வீதியை மறித்து பண்னைணயாள்கள் இன்னால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் அரசியல்வாதிகள் நீதிமன்ற கட்டளையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு  இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 7ம் திகதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமணரட்ன தேரர் மற்றும் இரு தேரர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மட்டு தலைமையக பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதின்றில் வழக்கு தாக்குதல் செய்து அவர்களிடம் முறைப்பாடு பெற்று அவர்களை எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை வழங்கினர்.

அதேவேளை 8ம் திகதி நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நா.உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சி சட்டத்தரணி சுகாஸ், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், வலிந்துகாணாமல்  ஆக்கப்பட்ட உறுவுகள் சங்க தலைவி,

மற்றும் பண்ணையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர் உட்பட 34 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்கு தாக்தல் செய்து அவர்களிடம் வாக்கு மூலங்கள் பெற்று அவர்களை எதிர்வரும் 17ம் திகதி ஏறாவூர் சுற்றூ நீதிமன்றில் ஆஜராகுமாறு  நீதிமன்ற  அழைப்பானையை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு இரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவர்களிடம் வாக்கு மூலங்களை பெறும் விசேட நடவடிக்கை ஒன்றை நேற்று சனிக்கிழமை பொலிசார் ஆரம்பித்து அவர்களை வீடுவீடாக தேடி வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பானைகளை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.