அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் மைதானங்கள் மக்களிடம் ஒப்படைப்பு.

(வி.ரி.சகாதேவராஜா)  திருக்கோவில் பிரதேசத்தில் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாடசாலைகளின் காணிகள் மைதானங்கள் மக்களிடம் ஒப்படைக்க பட்டன.
இக் காணி அனுமதிப்பத்திரங்கள்  அம்பாறை மாவட்ட செயலக செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது திருக்கோவில் வலையக்கல்வி பணிப்பாளர்.இரா..உதயகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  செயலாளர் .சிந்தக அபேவிக்ரம  விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் வலய உதவிகல்வி பணி்ப்பாளர் எஸ்.கங்காதரன் திருக்கோவில் வலையக்கல்வி அலுவலக  ஆசிரியர் ஆலோசகர் எஸ். ஷம்சன்  , பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர்  கே.உதயகுமார் ,திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ். ரவீந்திரன் மற்றும்  தாண்டியடி விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் எம். தர்மசீலன்
தாண்டியடி திருபதி வித்தியாலய அதிபர்  வி.உதயகுமார் திருக்கோவில்   விஸ்வதுளசி வித்தியாலய அதிபர் ஜெ.வுர்னோ தம்பிலுவில் மத்திய மகாவித்தியால அதிபர் திருமதி கோமலாதேவி  மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி திட்டமிடல் உத்தியோத்தர் எஸ்பி.புண்ணியசீலன்  ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.