அதன்படி மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் புதுநகர் பொது நூலகத்தின்ஒழுங்கமைப்பில் கழிவுப் பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியானது மாணவர்களினதும், பொது மக்களினதும் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் இந்நிகழ்வில்ன் புனர்நிர்மானம் செய்யப்பட்ட சு
புதுநகர் பொது நூலகத்தின் நூலக உதவியாளர் செல்வி எஸ்.கீதாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கிரிஜா பிரேம்குமார், புதூர் விக்ணேஷ்வரா வித்தியாலய அதிபர் ஐ.இலங்கேஸ்வரன், வலையிறவு மெதடிஸ்த மிஷன் பாடசாலையின் அதிபர் திருமதி வி.கிருஷ்ணகுமார், வீச்சுக்கல்முனை அன்னம்மாள் வித்தியாலய அதிபர் எஸ். பிரான்சிஸ், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களுடன் புதூர் நூலகத்தின் வாசகர் வட்டத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.