மட்டக்களப்பில் பயங்கரவாத மற்றும் நிகழ் நிலை காப்புசட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

((கனகராசா சரவணன்) )

இலங்கை அரசு உடனடியாக அடக்குமுறை சட்டவரைகளான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ் நிலை காப்புச் சட்டம் மீளப்பெறவேண்டும் என கோரி எதிர்ப்பு  தெரிவித்து கல்லடிப் பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (9) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள்  கல்லடி பாலத்திற்கு அருகாமையில் ஒன்றினைந்தனர்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதிவேண்டும், அனைத்து மனித ஊரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறலை உறுதிபடுத்து, நிகழ் நிலை காப்புச்சட்டத்தை முன்மொழிவதை மீளப்பெறு, ஊடகத்திற்கு சுதந்திரம் மற்றும் சுயாதீனம் வேண்டும், தகவல்களை அறிவதற்கும் கருத்து சுதந்திரத்திரம் எங்களது அடிப்படை உரிமையாகும்,

பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபை மீளப்பெறு, சமூகவலைத் தளங்களை பயன்படுத்துவது எங்களது சுதந்திரத்தை உங்களால் மட்டுப்படுத்தமுடியாது, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வீதி ஊடாக அரசடி சந்தியையடைந்து அங்கிருந்து பொலிஸ் தலைமையக நிலைய வீதி சுற்று வட்டத்தையடைந்து காந்திபூங்காவை சென்றடைந்து

பின்னர் அங்கு கோஷங்கள் எழுப்பியவாறு பகல் 12 மணிவரையில் சுமார் ஒருமணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்காரர்கள் கிழக்கு மாகாண சிவில் சமூகத்தினுடைய வேண்டுகொள் இந்த பயங்கரவாத மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டங்களை இல்லாமல் செய்யுமாறு அரசாங்கத்திரடம் கோரிக்கை விடுத்த பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.