போதைப் பொருளுடன் வைத்தியசாலை ஊழியர் இருவரை கைது செய்ய பொலிசார் முனைந்த வேளையில் ஒருவர் கைது செய்யப்பட்டபோதும் மற்றையவர் பொலிசாரின் கையை கடித்து விட்டு தப்பியோடியவர் பாக்குநீர் வழியாக சட்டபூர்வமற்ற முறையில் தமிழ்நாட்டுக்கு சென்றவேளையில் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ந் திகதி இரவு வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து 179 கிராம் ஐஸ் போதைப் பொருளை கைமாற்ற முற்பட்டவேளையில் குற்றத்தடுப்பு பொலிசாரால் அவர்களை கையும் மெய்யுமாக பிடிக்க முற்பட்டனர்.
அந்தவேளையில் ஒருவர் கைது செய்யப்பட்டபோதும் மற்றையவர் பொலிசாரின் கையை கடித்துவிட்டு தப்பியோடியிருந்தார்.
தப்ப்pயோடியவரைத் தேடி பொலிசார் வலை வீசி இருந்த வேளையில் இவர் தலைமன்னார் பாக்குநீர் கடல் ஊடாக இந்திய இலுவைப் படகு மூலமாக இந்திய தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை (06) இரவு இந்திய இலுவைப் படகு மூலம் சென்று இவர் சனிக்கிழமை (07) காலை ராமநாதபுரம் பகுதியில் கரையிரங்கியதும் இவரில் சந்தேகம் கொண்டவர்கள் ராமநாதன் பொலிசாருக்கு கொடுத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மண்டபம் மரைன் பொலிசார் இவரை கைது செய்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்தி தெரிவிக்கின்றது.
இதைத் தொடர்ந்து இச்சந்தேக நபரை மண்டபம் மரைன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தது.