கடந்த சில நாட்களாக IPPFORB – The International Panel of Parliamentarians for Freedom of Religion or Belief மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச குழுவினால் நடாத்தப்படும் செயல்திட்டத்தில் பங்கேற்ருந்தேன். இதில் பல நாடுகளில் இருந்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தார்கள். சர்வதேச ரீதியிலான ஏனைய நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது நாட்டில் நடக்கும் மதங்களுக்கு இடையிலான உரிமை மறுக்கப்படும் போதான அதனை தட்டிக் கேட்கும் சில உரிமைகள் உண்டு. அதிலும் குறிப்பாக தொல்பொருள் எனும் பெயரில் கூடுதலாக இந்துக்களுக்கு உரிமை மறுக்கப்படுவது, மத தலைவர்களை கைது செய்வது, பௌத்த பிக்குகள் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத மற்றும் இனவாத கருத்துக்களை வெளியிடுவது ICCPR – International Covenant on Civil and Political Rights என்னும் சட்டங்கள் இருந்தும் அவ் சட்டங்களை இங்கு அமுல்படுத்தாது போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் ஓர் சர்வதேச குழுவாக சில பல அழுத்தங்களை பிரயோகிப்பதற்கும் மற்றும் கடந்த மனித உரிமைகள் மீறல் மற்றும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாகவும் சர்வதேச அழுத்தத்தை தெரிவிக்க இவ் களம் எமக்கு பேருதவியாக வரும் காலங்களில் இருக்கும்.
நாட்டின் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல் திட்டங்கள் மூலமே எமது நாட்டுக்கான அழுத்தங்களை பிரயோகிக்க ஏதுவாக இருக்கும்.