மட்டக்களப்பில் இரு மனைவிமாரின் தந்தைகளை வாளால் வெட்டிய மருமகன்கள்

இருவர் மற்றும் சைக்கிள் திருடிய ஒருவர் உட்பட 3 பேர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள இரு பிரதேசத்தில் இரு வெவ்வேறு  சம்பவங்களில் இரு மனைவிமார்களின்  தந்தைகளான மாமான்மாரை வாளால் வெட்டிய இருரையும் மற்றும் துவிச்சக்கரவண்டி திருடிய இளைஞன் ஒருவர் உட்பட 3 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புதூர் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை  9 ம் திகதி மதுபோதையில் மனவியின் தந்தை மீது வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் தலையிலும் கையிலும் படுகாயமடைந்த நிலையில்  மட்டு போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 30 வயதுடைய மருமகன் தப்பி ஓடி தலைமறை வாகிய நிலையில் சம்பவதினமான நேற்று மாலை கைது செய்தனர்.

அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 ம் திகதி  மாமாங்கம் பகுதியில் மதுபோதையில் மனைவியுடன்; ஏற்பட்ட சண்டையின் போது மனைவியாரின் தந்தை மீது வாளால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இந்த நிலையில் புளியம் தீவு அதிகாரி வீதியில் வீடு ஒன்றில் வேலி அடைக்கும் வேலையில் ஈடுபட்ட 22 வயது இளைஞன் ஒருவன் அங்கிருந்த 50 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றை திருடிக்கொண்டு சென்ற நிலையில் சிசிரி கமாராவில் பதிலாகிய வீடோ படத்தின் மூலம் அடையாளம் கண்டு கொண்ட திருடனை நேற்று கைது செய்தனர்

இந்த வேவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது வாளால் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய மாமாங்கத்தைச் சேர்ந்தவரின் மருமகனை பிணையில் விடுவித்ததுடன் ஏனைய இருவரையும் எதிர்வரும் 25 ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.