(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (10) இரவு புறப்பட்டு வந்த ‘புலதுசி‘ புகையிரத வண்டியில், வெலிகந்த பகுதியில் வைத்து யானை மோதுண்டது. இதில் குறித்த யானை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனால் குறித்த புகையிரதப் பாதை ஊடான போக்குவரத்தும்சில மணி நேரம் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.