மட்டு சத்துருக் கொண்டான் 186 பொதுமக்கள் படுகொலையின் 33 ஆவது நினைவஞ்சலி

( கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் 186 பொதுமக்கள் படுகொலை 33 வது ஆண்டு நினைவு அஞ்சலி சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்று சனிக்கிழமை (9) மாலையில் ஈகைசுடர் ஏற்றி எழுச்சி பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1990 ம் ஆண்டு சத்துருக்கொண்டான் பனிச்சையடி ,கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை இராணுவம் சுற்றிவளைத்து அங்கு வீடுகளில் இருந்த பெண்கள் ஆண்கள் உட்பட 186 பேரை கூட்டத்துக்கு என அழைத்துச் சென்று அவர்களை  துப்பாக்கியால்  சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.

இந்த படுகொலையின் 33 வதது நினைவஞ்சலி பிரதேச பொதுமக்களின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சந்தியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறுவினர்கள் அரசியல்வாதிகள் கிறிஸ்தவ பாதிரியார்கள் பொது அமைப்புக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நினைவு தூபியில் விளக்கேற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்வர்களுக்கு இலங்கை நீதி விசாரணையில்  நம்பிக்கையில்லை எனவும் சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்