(க.ருத்திரன்) பேரினவாதிகளால் மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் ஊடகவியலாளர்கள்,சர்வமதத் தலைவர்கள்,குடிசார் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தடுத்து வைத்தமைக்கு கண்டணம் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று
மேற்காள்ளப்பட்டது.மட்டக்களப்பு பிரதான கொழும்பு வீதியின் அமெரிக்க மிஷன் தேவாலயத்திற்கு முன் வீதியில் ஓன்று கூடியவர்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.பிக்குகளின் அடாவடியை நிறுத்து,சர்வதேச சமூக செயற்பாட்டாளர்களை பாதுகாப்பதற்கு அழுத்தம் வழங்கு,ஊடகத்துறையை அடக்காதே என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.குறித்த விடயத்திற்கு நீதி கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கோரி;க்கை அடங்கிய மகஜரை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பித்தனர்.