(அஸ்ஹர் இப்றாஹிம்) வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா துறை மூலம் எமது நாட்டுக்கு பெரும் வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் சீகிரியாவை சூழவுள்ள பிராந்தியத்தின் சுற்றுலா வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு, முன்னேற்றுவதற்கும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சீகிரியாவை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்து சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்து,வருமான உருவாக்கம், முதலீட்டு ஊக்குவிப்பு நோக்கத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் 15 மில்லியன் அமெரிக்கன் டொலர் கடனுதவியுடன் இது முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சீகிரிய புதிய நகரம், பொதுமக்கள் வாகன தரிப்பிடம், வியாபார தலங்கள், நூதனசாலை, நுழைவாயில் நிர்மாணம், வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் என்பன அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.