ஆடி அமாவாசையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் சிறப்பிடம் வகிக்கின்றது.இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வரலாற்று சிறப்புமிக்க தலமாக விளங்கிவருகின்றது.
கடந்த 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த பத்து தினங்களாக நடைபெற்றுவந்ததுடன் நேற்று காலை தேர் திருவிழா நடைபெற்றது.
இன்று புதன்கிழமை வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சிவன் பார்வதியுடன் மாமாங்கேஸ்வரர் உள்வீதியுலா வந்து எருது வாகனத்தில் தீர்த்தக்கரையினை அடைந்து மாமாங்கேஸ்வரப்பெருமானுக்கு தீர்த்தக்கேணியில் விசேட பூஜை இடம்பெற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.