திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் சுற்றுசூழல் செயலமர்வு ஒன்று நேற்று திருகோணமலை இராவணேசன் தமிழ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்த்திட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் இச்செயற்திடடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள், மற்றும் இளையோர்களுக்கான ” தனி நபர் சுகாதாரம்” பற்றிய செயலமர்வு நடைபெற்றது. இந்நிகழ்வு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
விரிவுரையாளராக .ச..ஷியாம் சுந்தரம் ,PHI கு.சரவணபவன் PHI மற்றும் உ.பரிமளா PHM கலந்துகொண்டவர்கள். அத்துடன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களான .G.A.பிரான்சிஸ், .K.ரஜித், .A.M.பிரசாத்,A.D.பொனிபஸ்,M.டினேஷ்
ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
8
Attachments
• Scanned by Gmail