கம்பஹா பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய 15 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.குறித்த சிறுவர் இல்லத்தின் உரிமையாளரினால், காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில், நேற்று போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய காணாமல் போன குறித்த சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கம்பஹா போலீசார் தெரிவித்துள்ளனர்.