ஜப்பானில் உள்ள நரிட்டா நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
301 பயணிகளுடன் நேற்று இரவு 8.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து “A 330-300” ஏர்பஸ் ரக விமானம் புறப்பட்டது.எனினும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 02 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்குப் பின்னர் விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளை வேறு விமானங்கள் மூலம் ஜப்பானில் உள்ள நரிடாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.