எரிந்த நிலையில் இளைஞனின் சடலம்

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அயந்தன், வயது 23 என்ற இளைஞரே மரணித்துள்ளார்.அவர் இன்று காலை தொழிலுக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.