காரைதீவு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவத்தின் ஓரங்கமாக நேற்று (20) செவ்வாய்க்கிழமை இரவு முத்துச் சப்பர ஊர்வலம் நடைபெற்றது.
கடந்த 14ஆம் தேதி புதன்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய தீமிதிப்பு உற்சவம் தற்போது 10 நாட்கள் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன.எதிர்வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தீமிதிப்பு வைபவம் பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ் தலைமையிலே நடைபெறும்.பூஜைகள் தினமும் பகல் 12 30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் மா.கணேசலிங்கம் தெரிவித்தார்.
23ஆம் தேதி காலையில் மஞ்சள் குளித்து தீமிதிப்பு இடம்பெறும். பகல் அன்னதானம் இடம் பெறும் என செயலாளர் கணேசலிங்கம் மேலும் தெரிவித்தார்.