மாவட்டத்தின் பிரதான உற்பத்தித் துறைகளான விவசாயம், கால்நடை வளர்ப்பு, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியதுடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
நெல்லுக்கான நிர்ணய விலை தாமதமாக நிர்ணயிக்கப்படுதல் மற்றும் நெல்லினை உலரவிடும் இயந்திரம் இன்மையினால் பருவ பெயர்ச்சிக்காலத்தில் விவசாயிகள் எதிர் நோக்கும் நிலைப்பாடுகள் போன்ற விடயங்கள் அரசாங்க அதிபரினால் அமைச்சரின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது.
களுதாவளையில் அமைந்துள்ள மத்திய பொருளாதார நிலையத்தின் தொழிற்பாட்டை செயற்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கையினை எடுத்தல், கரடியனாற்றில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தினை மேம்படுத்தல், மாவட்டத்தில் கைவிடப்பட்ட சிறிய குளங்களை மீள் புனரமைத்தல், நவீன தொழில் நுட்ப உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கல், விதை சேமிப்பு களஞ்சியம் மற்றும் நெல் சந்தைப் படுத்தல் பிராந்திய காரியாலயத்தினை மாவட்டத்தில் அமைத்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள் அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டன.