உலக புகைத்தல் தின விழிப்புணர்வு

உலக புகைத்தல் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பகுதியில் விழிப்பூட்டல் நிகழ்வொன்று இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு சென்ற வைத்திய அதிகாரியின் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, புகைத்தல் பாவனையால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு விழிப்பூட்டல் நிகழ்வில் ஈடுபட்டனர்.