கிழக்கு மாகாண ஆளுனரின் எண்ணக் கருவில் கடற்கரை சுத்திகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுனரின் எண்ணக் கருவிற்கு அமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி திட்டம் இன்று காலை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் பாசிக்குடாகடற்கரையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாசிக்குடா பிரதேசத்தில் உள்ள வீதிகள்,பொது இடங்கள்,யானைக் கல் கடற்கரை பகுதி என பொலித்தின் பாவனைப் பொருட்க்கள்,கழிவுப் பொருட்க்கள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு துப்பரவு செய்யப்பட்டு அகற்றப்பட்டன.நீர் தேங்கி காணப்படும் இடங்கள் கணரக இயந்திரங்களின் உதவியுடன் மண் போட்டு நிரப்பட்டது.

கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் பற்றைக் காடுகள் அகற்றப்பட்டன.சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக் கூடிய வகையில் கடற்கரையினை மாற்றம் செய்யும் வகையில் இப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப் பணியில் பிரதேச சபையுடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரா சபை,கல்குடா பொலிசார்,பொதுச் சுகாதார பிரிவினர்,மற்றும் பிரதேசத்தின் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்கள் என்பன இணைந்து இவ் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் பணியானது பொது இடங்கள்,வீதிகள் என பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு கிழமையும் இவ் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பிரதேசம் தோறும் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

இன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் இவ் நிகழ்ச்சி திட்டம் இன்று ஆரம்பித்;து வைக்கப்பட்டுள்ளது.இன்றைய ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.நவநீதன்,கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு,எம்.சந்திரகுமார,சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பாசிக்குடா பொறுப்பாளர் எம்.எச்.மாகிர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.யசோதரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.