செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா (Eliška Žigová) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழுவினருடன் நேற்று சிநேகபூர்வ கலந்துரையாடலொன்றை நடத்தினார்கள்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.காவின் உயர்மட்டப் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மேம்பாடு குறித்து பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.