(அஸ்ஹர் இப்றாஹிம்)
வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, கல்முனை, ஸாஹிறா தேசிய கல்லூரி மாணவ தலைவர்களுக்கான வீதி ஒழுங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஒழுக்காற்றுசபை என்பவற்றின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.