வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

வடமாகாண புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (19.05.2023) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மடுவில் இந்துக்களின் காணியை அபகரித்து கிறிஸ்தவருக்கு தாரை வார்த்த அம்மணியே வெளியேறு, ஊழல்வாதிகளை காப்பாற்றாதே, தமிழினத்தை அழிக்காதே எனும் வாசகம் அடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.