முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளில் முஸ்லிம் மக்களும் பங்கேற்பு

[த.சுபேசன்]

வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் நேற்று சாவகச்சேரி மகிழங்கேணி கிராமத்தில் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.நினைவேந்தல் மற்றும் தேசத்தின் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளில் முஸ்லிம் மக்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.