தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் களுவாஞ்சிகுடியில்.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும், மண்முனைதென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் இணைந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில் சர்வதேச மகளிர் தினத்தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

2023.03.20 திங்கட்கிழமை பி.ப 03.00 மணிக்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத் தலைவர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் யேசுதாசன் கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருள்மொழி, நிஸ்கோ முகாமையாளர் சதீஷ்வரி கிருபாகரன் , கிரான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தங்கராசா விந்தியன் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மகளிர் பெருமை கூறும் பேச்சு மற்றும் கவிதை கதிரவன் கலைக் குழுவின் பெண்கள் உரிமை மற்றும் விடுதலையை வலியுறுத்தும் நாடகமும் இடம்பெற்றது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இளைஞர் சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய திருமதி சதீஷ்வரி கிருபாகரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தேவை நாடும் மகளீர் அமைப்பின் பிராந்திய முகாமையாளர் திருமதி சங்கீதா பாலசிங்கம், மத்திய முகாமையாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன், சட்டத்தரணிகளான யோகேஸ்வரன்,றஜிந்தா கருணாநிதி, சந்திரன் பிரசாந்தினி, ஆகியோருடன் உளவளத்துறை ஆலோசகர் ஜெகதீஷ்வரன் சித்ரா , தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி எஸ். தனுசன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.