மைத்திரியின் மனு கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்கப்படுகிறது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திரு மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.