வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிவு செய்யப்பட்ட 80 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக இந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.