மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிபர்களுக்கான திட்ட மீளாய்வு செயலமர்வு வியாழக்கிழமை(29) மட்டக்களப்பு சர்வோதயத்தில் இடம்பெற்றது.
வலயக்கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சஜீவன், திட்டமிடல் உதவிக்கல்வி பணிப்பாளர் ஜீவானந்தராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, வருடாந்தம் திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மாதாந்தம் திட்ட மீளாய்வு கூட்டமொன்றை எவ்வாறு பாடசாலையில் கூட்டி கலந்துரையாடுவது என்பது தொடர்பிலும் மாதிரி கூட்டமொன்று செயற்பாட்டு ரீதியாக செய்துகாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.