அதிபர் சத்தியநாதனுக்கு பிரியாவிடை

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் ஏறாவூர் பற்று மேற்கு கோட்டத்தில் உள்ள மமே/ வேப்பெவட்டுவான் அ.த.க.பாடசாலையில் அதிபராக கடமையாற்றும் S.சத்தியநாதன் SLPS -1  இம்மாதம் 31/12/2022 திகதி தனது சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். அவரை பாராட்டும் பிரியாவிடை நிகழ்வு 27/12/2022 திகதி ஏறாவூர் பற்று மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு அ.ஜெயக்குமணன் தலைமையில் ஏறாவூர் பற்று மேற்கு கோட்ட அதிபர்களினால் மமே/வேப்பவெட்டுவான் அ.த.க.பாடசாலையில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.