மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கு மஹிந்த சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திற்கு பிரதீப் யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த நியமனங்கள் எதிர்வரும் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.