எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேலதிக சிறப்பு புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக புகையிரத துணைப் பொது மேலாளர் ஏ. டி. ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை (23) முதல் இவ்வாறு 08 மேலதிக சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 3 புகையிரதங்களும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை 3 புகையிரதங்களும் சிறப்பு சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் சிறப்பு புகையிரதம் இணைக்கப்படவுள்ளது.