வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை!

வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கை நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயமாக வைத்திருக்கலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாவாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.