( வி.ரி.சகாதேவராஜா)
முதன் முதலில் சைவசித்தாந்த நூலை எழுதியவரும் சித்தர்களுள் மூத்த சித்தரும் உலகிற்கு நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அளித்த வருமான திருமூலர் பெருமானின் குரு பூஜை தினம் இன்று(7) திங்கட்கிழமை பௌர்ணமி தினமாகும்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்திலே திருமூலர் பெருமானின் குரு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதனை ஒட்டி சித்தர்களின் குரல் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலே சண்டி ஹோமம் இடம்பெற்று வருகிறது.
நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சண்டி ஹோமம் ஆரம்பமாகியது .
இன்று குருபூஜை நாளை ஹோமம் நிறைவுக்கு வருகிறது.