கலைஞர் கள் கௌரவிப்பு

நாட்டினதும் இனத்தினதும் மற்றும் உலகத்தின் இருப்புக்கு கலை மிக முக்கிய பங்கு வகிப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட கலை இலக்கிய பெருவிழா மற்றும் இந்து பாரம்பரிய கலைஞர் கெளரவிப்பு விழா நிகழ்வுகள் இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றபோதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் சிறிய வயதில் கலைத்திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் அவர்கள் எதிர்காலத்திலும் கலைத்துறைக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர்களாக மிளிரலாம். கலைத்துறையில் பல சாதனைகளை படைக்க இவ்வாறான வாய்ப்புக்கள் ஏதுவாக அமைகின்றன. கலைத்துறையில் உயரிய நிலைக்கு செல்ல வாழ்த்துவதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

பிரதேச மட்ட கலை இலக்கிய விழாவில் முதலாம் இடம் பெற்றவர்கள் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்படுவதுடன் மாவட்ட மட்டப்போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற 113 பேர் இதன்போது சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.பாடசாலை மட்ட போட்டி மற்றும் திறந்த போட்டி என்றடிப்படையில் இப்போட்டிகள் நடைபெற்றன.

மேலும் இந்து பாரம்பரியத்திற்கு ஆற்றிய சேவைக்காக 32 கலைஞர்கள் இதன்போது பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

கலை நிகழ்வுகள் பலவும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட பொறியியலாளர் ஏ.கே.எம். நபீல் , ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய சக உத்தியோகத்தர்கள்,கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.