மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசேட விசாரணை!

நாட்டில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

மே 9 வன்முறை மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.