தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளிப்பு!

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது நன்சான்றிதழ் பத்திரங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் நேபாளத் தூதுவராக பாசூ தேவ் மிஷ்ரா ஆகியோரே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வின்போது இவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட வரவேற்பளிக்கப்பட்டதோடு, அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதானிகள் இதில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.