கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து அவர் திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.கே.ஏ.ஏ.எஸ்.கனுகல தெரிவித்தார்.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை உரிய கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக திரு.கே.ஏ.எஸ்.கனுகல தெரிவித்துள்ளார்.