16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 04 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.