ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல்!

சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெற்றது.

மேலும் போராட்டம் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி சோசலிச வாலிபர் சங்கத்தினால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.