பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் – அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்து

பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், “இன்று உழைப்பாளர் தினம் என்பதால் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பேரணிகள் அமைதியாக நடத்தப்படுகின்ற போதிலும், பாதுகாப்பு காரணிகளை முன்னிறுத்தி அவ்வாறான பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும்” என தெரிவித்துள்ளது.