ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இதில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளைபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சுமார் 10 நிமிடங்கள் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.