பாடசாலைக்கான அலுவலக உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு

( அஸ்ஹர் இப்றாஹிம்)

முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை அல் பஹ்றியா தேசிய பாடசாலைக்கான அலுவலக உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (8) பாடசாலை அதிபர் முஹம்மட் பைஸால் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் தேவை கருதி நீதி அமைச்சர் கௌரவ அலி சப்றி அவர்களுக்கு கொடுத்த வேண்டியதற்கமைய அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலக உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.