COLOURS ” பிரதேச விளையாட்டு கெளரவிப்பு விழா.

 

(எருவில் துசி) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் விளையாட்டுத் துறையினை மேம்படுத்தும் வகையில் கடந்த வருடங்களில் மாவட்ட, மாகாண, தேசிய    மட்டங்களில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்ண கெளரவிப்பு நிகழ்வு மற்றும் மலர் வெளியீடானது இன்றைய தினம் (25.01.2022) மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் களுதாவளை கலாசார மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின்போது தங்களது திறமைகளை மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் நிரூபித்தது சாதனைகள் புரிந்த வீர வீராங்கனைகள் மற்றும் அவர்களை பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுனர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட்டதோடு “வர்ணங்கள் ” சிறப்பு நூல் வெளியீடும் இடம்பெற்றது.
இந்த கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் திரு க. கருணாகரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன் உட்பட மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.