கல்முனையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி நடந்து கொள்ள வேண்டும் 

( எம் .என் .எம் .அப்ராஸ் )

கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரம் முதல் இதுவரை ( ஜனவரி மாதம் ) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சுகாதர நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக பேணி நடந்து கொள்ள வேண்டுமென கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெற்கு சுகாதார பிரிவில் வசிக்கும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை மிகவும் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சமுக இடைவெளி, முக கவசம் என்பவற்றை முறையாக அணிந்து கொள்ள வேண்டும் இதன் மூலம் நாம் தொற்று நிலையினை கட்டுப்படுத்த முடியும் பொது மக்கள் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும் .

அத்துடன் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகிறது இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் மற்றும் முதலாவது இரண்டாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கான மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடுப்பூசி நிலையங்கள் , மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்று வருகிறது

பொது மக்கள் தங்களின் நலன் கருதி தடுப்பூசியை பெற்று கொள்ள வேண்டும் தடுப்பூசியை பெற்று கொண்டாலும் சுகாதர நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டுமென கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் .எம். அஸ்மி மேலும் தெரிவித்தார்.