தேசிய சதுரங்க சம்பியன் – 2022; நிந்தவூர் அல்-அஷ்ரக் மாணவர்கள் சாதனை

(பொலிவேரியன் நிருபர் – எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட சதுரங்க சம்பியன் – 2022 போட்டியில் கமு/கமு/ அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் நான்கு மாணவர்கள் தேசிய மட்ட major division போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

14 மற்றும் 15 என இரு தினங்களாக இடம்பெற்ற இப்போட்டியில், ஏ.ஏ.பாஸில் அப்துல்லா, எம்.சி. ஹிமாத், எம்.எம்.எம்.அக்மல், எம்.ஆர்.ஏ. ஹசன் அல் – பன்னா ஆகிய நான்கு மாணவர்களே தெரிவாகிய மாணவர்களாவர்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பங்குபற்றிய அனைத்து வீரர்கள், எப்போதும் உறுதுணையாய் நிற்கின்ற பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர் மற்றும் கழகத்தின் பொறுப்பாசிரியர் ஏ. ஹலீம் அஹ்மதா, இலங்கையின் தேசிய நடுவரான ஏ.எம் சாகீர் அஹமட் ஆகியோருக்கு அல் – அஷ்ரக் தேசிய பாடசாலை சார்பாகவும் அஷ்ரகியன் சதுரங்க சம்மேளனம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.