( வாஸ் கூஞ்ஞ)
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மன்னார் பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து மன்னார் பிரதேச செயலக கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வையும் வடமாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தினால் கலை ஊக்குவிப்புக்காக நிதி அனுசரணை வழங்கப்பட்ட மன்னார் அமுதனின் ‘ஒற்றை யானை’ என்ற சிறுகதை நூலும் வெளியீடு செய்யப்பட்டது.
மன்னார் கலையருவி நிலைய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) மாலை 2 மணியளவில் நடைபெற்ற இவ் நிகழ்வில் கலை இலக்கிய போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கும் பரிசளிப்பும் இட்பெற்றது.
-மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மும்மதத் தலைவர்கள் கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.