ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் இன்று (15)காலை 8 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
காலை 8 மணியாவில் சமைத்து கொண்டிருக்கின்ற போது திடீரென சமையல் அடுப்பு வெடித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். உயிர் சேதம் ஏற்படவில்லை
யாருக்கும் ஆபத்து இல்லை.
கிண்ணியா பொலிஸார் வருகை தந்து பார்வை செய்து
விபரங்களைப் பெற்றுக் கொண்டனர் . அண்மைக் காலமாக எரிவாயு வெடிப்புச் சம்பவம் இடம் பெற்று வரும் நிலையில் குறித்த எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


