கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இ.போ.ச. பஸ்ஸை மறித்து எதிர்ப்புப் போராட்டம்

ஹஸ்பர் ஏ ஹலீம்_

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று நடந்த கடல் வழிப்பாதைப் பயணத்தில் ஆறு உயிர்களைக் காவு கொண்டதன் எதிரொலியாக இன்று (24.11.2021) காலை 7.00 மணிக்கு இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதனால் குறிஞ்சாக்கேணி பிராதான வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது

பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக தற்காலிகமாக இவ் பஸ் சேவை போடப்பட்டது

இவ்பஸ் சேவை காக்காமுனை, குறிஞ்சாக்கேணி,கச்சக்கொடித்தீவு ஊடாக கிண்ணியாவை சென்றடைவதற்காக சேவையில் ஈடுபடுபடுவதற்காக விடப்பட்டது

எனினும் இவ் பஸ் சேவையை ஆறு உயிர்கள் போனதன் பிறகா போட வேண்டும், இதற்கு முன்னரே சேவையில் ஈடுபடுத்தியிருக்கலாமே எனக் கோரியே எதிர்ப்பில் ஈடுபட்டனர்

பஸ் செல்ல முடியாமல் பஸ்ஸிக்கு முன்னர் கற்கலை இட்டு தடைப்படுத்தி இருந்தனர்

காக்காமுனையிலிருந்து பாடசாலை செல்வதற்காக சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிஞ்சாக்கேணியில் இறக்கப்பட்டனர்

அங்கியிருந்து அவர்கள் வீடு சென்றனர்.சிலர் வேறு மார்க்கத் தினூடாக பாடசாலை சென்றனர்

அவ்விடத்துக்கு வந்த கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஇ மற்றும் கிண்ணியா இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள் வருகை தந்தனர்

எதிர்ப்பாளர்களிடம் பேசிக் கலந்துரையாடி எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து எதிர்ப்புக் கைவிடப்பட்டது