கவிஞர் மேராவின் ஆறு நூல்கள்  வெளியீடும் அறிமுகமும்.

மட்டக்களப்பு –  பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவிஞர் மேராவின் ஆறு நூல்கள்  வெளியீடும் அறிமுகமும் கடந்த சனிக்கிழமை  முனைக்காடு உக்டா சமூவளநிலையத்தில் நடைபெற்றது.கவிஞர் சோலையூரான் ஆ.தனுஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க்கவிதைகள், பன்முகநோக்கில் ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் சில பார்வைகள், கொல்லப்பட்ட எங்களது வாக்குமூலம் (கவிதைத்தொகுதி), மனமாற்றம் (சிறுகதைத்தொகுதி), பாடி மகிழ்வோம் (சிறுவர் பாடல்கள்) ஆகிய ஆறு நூல்களின் வெளியீடும், அறிமுகமும் இடம்பெற்றது.

இந்நூல்களின் முதல்பிரதியை தங்கமலர் வடிவேல் பெற்றுக்கொண்டதுடன், பேராசிரியர் மா.செல்வராசா, பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

நூல்களின் அறிமுகவுரைகளை பேராசிரியர் செ.யோகராசா, கவிஞர் த.மலர்செல்வன், அருள் கருணா, கவிஞர் அரசையூர் பகீ ஆகியோர் நிகழ்த்வதினர்.